Sunday, June 28, 2009

பெரம்பலூரில் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான்

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் பொதுச்செயலாளர் கோவை.கு.இராம கிருட்டிணன், பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் இரா.இலட்சுமணன், ம.தி.மு.க கோவை மாநகர மாணவரணிச் செயலாளர் சந்திரசேகர் ஆகிய தோழர்களை கைது செய்ததைக் கண்டித்தும், தோழர்கள் மீதான தேசியப்பாதுகாப்புச் சட்டத்தை விலக்கக்கோரியும் பெரம்பலூரில் வரும் ஜீலை 1 ஆம் நாள் புதன் கிழமை மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தோழர் துரை.தாமோதரன் தலைமையில், ம.தி.மு.க மாவட்டத்தலைவர் வழக்கறிஞர் சின்னப்பா அவர்களின் முன்னிலையில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், கலைப்போராளி இயக்குநர் சீமான் அவர்களும் கண்டன உரையாற்ற உள்ளனர்.
ஜீலை 1 ஆம் நாள் மாலை 6 மணியளவில் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள வானொலி திடலில் கண்டனக் கூட்டம் நடைபெறஉள்ளது. தமிழின உணர்வாளர்களே, அவசியம் பங்கேற்பீர்!

No comments:

Post a Comment