Friday, June 26, 2009

கோவை ராமகிருஷ்ணன் அவர்களை தேசிய பாதுகப்பு சட்டத்தில் கைது செய்ததைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்


தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்,மற்றும் தமிழுணர்வாளர்களை கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்



பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், பெரம்பலூர் மாவட்ட பெரியார் திராவிடர் கழக செயலாளர் இரா.இலட்சுமணன், ம.தி.மு.க கோவைமாவட்ட மாணவரணிச் செயலாளர் புதூர்சந்திரசேகர் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த தமிழக அரசைக்கண்டித்தும், தமிழுணர்வாளர்களை விடுதலை செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் 26-6-2009 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல.அங்ககுமார் தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர்துரைசாமி,ராசு,அகிலன்,கார்த்திகேயன்,வழக்கறிஞர்கந்தசாமி,பாரதிவாசன்,மயில்சாமி,முத்துக்குமார்,மனிதநேயப்பாசறை சக்திவேல்,தென்மொழி துரையரசனார்,இயற்கை வாழ்வகம்முத்துச்சாமி,உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment