Friday, June 26, 2009

கோவை ராமகிருஷ்ணன் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்





ஈழ தமிழர்களை படுகொலை செய்ய இந்திய அரசால் இலங்கை சிங்கள ராணுவத்திற்கு வழங்குவதற்குக்காக ஆயுதுங்கள் ஏற்றி சென்ற லாரிகளை கோவையில் பொதுமக்கள் ஆதரவோடு தடுத்து நிறுத்தி போராடிய பெரியார் திராவிடர் கழகப் பொது செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் தோழர்களை தேசிய பாதுகப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த தமிழக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து இன்று (26/ ௦06/ 09) வெள்ளிக்கிழமை காலை 10.௦௦ மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை பெரியார் தி.க தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை வகித்தார். துணை தலைவர் வீராசாமி, செயலாளர் விசயசங்கர், அமைப்பளர் தந்தை பிரியன், இளைஞர் அணி செயலாளர் சுரேஷ், பொறுப்பாளர் ரவிசந்தர் , ம.தி.மு.க பொறுப்பாளர் செல்வராசு மற்றும் பெரியார் திராவிடர் கழக தோழர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள்.

1 comment:

கவிமதி said...

தோழர்களே உங்கள் போராட்டங்களில் கலந்துக்கொள் இயலாமல் தவிக்கிறோம். எங்களில் பணியாக குறைந்த அளவு பரப்புரைகளாவது செய்துவருகிறோம்.

போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள்

Post a Comment