Sunday, April 26, 2009

இளம்பிள்ளையில் காங்கிரசை வரும் தோற்கடிக்க வேண்டி காயக்கட்டு ஊர்வலம்















19।04.09 மாலை 4.00 மணிக்கு சேலம் இளம்பிள்ளையில் ஈழத்தமிழர் படுகொலை கண்டித்து, இலங்கை அரசுக்கு இன்றுவரை துணை நிற்க்கும் காங்கிரசு அரசை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டி காயக்கட்டு ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் தி.க மாவட்ட இணைசெயலாளர் முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் ஈழத்தமிழரை கொன்று குவிக்கும் காங்கிரசை புறக்கணிப்பீர், வாக்குக்காக தமிழர்களை தேடிவரும் சோனியாவை தமிழகத்தில் அனுமதிக்க மறுப்போம், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும், தமிழர்களே தமிழர்களே மன்றாடி கேட்கின்றோம், காலில் விழுந்து கேட்கின்றோம் உங்கள் மானமுள்ள வாக்கை தமிழின துரோக காங்கிரசுக்கு போடாதீர்- கை சின்னத்திற்கு போடாதீர் என்று முழக்கமிட்டு சென்றனர். ஊர்வலத்தில் 100 கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.









No comments:

Post a Comment