Sunday, April 12, 2009

இரசாயன வாயு குண்டுகளை வீசி தமிழினப் படுகொலையை நடத்தும் இந்திய, இலங்கை அரசுகளைக் கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம்

களத்தில் நின்று மோதும் புலிகளை சமாளிகக முடியாது திராணியற்று திணறும் சிங்கள இராணுவம், வழக்கம் போல தனது குள்ளநரித் தனத்தை வெளிபடுத்தியுள்ளது.

சிறீலங்காவின் கொடூரத் திட்டத்திற்கு உதவியாக, இந்தியாவும் நேரடியாக இரசாயன விச வாயு குண்டுகளை வழங்கியுள்ளது. இரசாயன விச வாயு குண்டுகளை வீசி தமிழினப் படுகொலையை நடத்தும் இந்திய, இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியை கண்டித்து புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று செவ்வாய் காலை 11 மணியளவில் புதுவை மாநகரின் மைய்யப் பகுதியான அண்ணா சிலையருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


சில மணி நேர இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், 100 க்கும்மேற்பட்ட பெரியார் தி.கவினர் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில பெரியார் தி.க தலைவர்.லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். தந்தை பிரியன், விஜயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இரா।மங்கையர் செல்வன் (மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்புத் தலைவர்), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமை கூட்டமைப்பு) ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். லோகு.அய்யப்பன் தனது தலைமையுரையில், ஈழத்தமிழர்கள் மீது ராஜபக்சே அரசுநடத்தும் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்தும், தமிழகத்தை ஒரு மாநிலமாக உள்ளடக்கிய இந்தியா, தமிழினத்திற்கு செய்யும் வரலாற்றுத் துரோகத்தையும் விளக்கிப் பேசினார்.

மேலும், இத்தாலி. சோனியாவின் காங்கிரஸ் கட்சியை மண்ணைக் கவ்வ செய்ய உணர்வாளர்கள் தீவிரக் களப்பணியாற்ற வேண்டும் என தனது உரையில்குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment