Monday, April 13, 2009

சோனியாவே போரை நிறுத்து! - முத்துக்குமாரின்75 வது நினைவு நாள்

இனப்படுகொலைக்கு எதிரான பெண்கள் இயக்கம்

சோனியாவே போரை நிறுத்து!

என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னையில் 13।04.2009 அன்று 100 க்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர்। இனப் படுகொலைக்கு எதிரான பெண்கள் இயக்கம் என்ற அமைப்பினர் சென்னை கொளத்துாரில் மாவீரன் முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் முத்துக்குமாரின் 75 ஆவது நினைவுநாளையொட்டி நேற்று காலை பேராசிரியர் சரசுவதி அவர்கள் தலைமையில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்।

காவல்துறையினர் அனுமதி இல்லை எனக்கூறி உண்ணாவிரதம் இருந்த இடத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டனர்। எனவே பெரம்பூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான தனியார் இடத்தில் இன்று இரண்டாம் நாளாக உண்ணா விரதத்தைத் தொடர்ந்து நடத்துகின்றனர் அந்த அமைப்பினர்।

இந்த அமைப்பில் தமிழ்நாட்டி்ன் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த மகளிர் இணைந்து உண்ணாநிலைப் போரில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment