Monday, October 19, 2009

ஆண்டிமடம், கருரில் பெரியார்தி.கவின் பயிற்சி வகுப்புகள்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புதிய தோழர்களுக்கான பயிற்சிமுகாம் நடைபெறஉள்ளது.

நவம்பர் மாதம் 7 மற்றும் 8 சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்பு நடைபெறும்.

கருர் நகரில் நவம்பர் 14 மற்றும் 14 சனி ஞாயிற்றுக் கிழமைகளில் புதிய தோழர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறும்.

இரண்டு பயிற்சிமுகாம்களிலும் பெரியார்தி.க தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர்கள் கோவை.கு.இராமகிருட்டிணன், விடுதலை.க.இராசேந்திரன், சிற்பி. இராசன் ஆகியோர் வகுப்பு எடுக்க உள்ளனர்.

ஆண்டிமடம் பயிற்சிவகுப்பில் திருச்சி சவுந்தரராசன் அவர்கள் திராவிடர் இயக்கம் எனும் தலைப்பில் வகுப்பு நடத்த உள்ளார்.

ஆண்டிமடம் பயிற்சி வகுப்புகளுக்கான முன்னேற்பாடுகளை திருச்சி சவுந்தரராசன் அய்யா அவர்கள் தொடங்கியுள்ளார். கருரில் தோழர் தனபால் முன்னேற்பாடுகளைத் தொடங்கியுள்ளார்.

அரியலூர் பெரம்பலூர் கடலூர் மாவட்டப்பகுதி தோழர்கள் 9786889325, 9841293736, 9443648263 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

கருர் பகுதி தோழர்கள் 9943147328 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment